வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு!
வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை ஒத்திவைப்பு தொடர்பாக...
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை, மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பக்தர்கள் பலியாகினர். மற்றும் 20 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து யாத்திரை நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாக, தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மோசமான வானிலை மற்றும் இந்தப் பகுதியில் ஏற்பட்ட பல நிலச்சரிவுகள் காரணமாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தொடர்ச்சியாக 14 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை, மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம்!
Due to heavy rainfall in Jammu and Kashmir's Bhawan, the commencement of the temporarily suspended Mata Vaishno Devi Yatra stands postponed till further orders, as per the Shri Mata Vaishno Devi Shrine Board.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.