மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!
மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள் நடைமுறை
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை, அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் மே 1 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே, சிலிண்டர் முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
ஈரான் - அமெரிக்க போர் தொடங்கிய பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலைகள் ரூ.60 வரை உயர்ந்தது. வணிக சிலிண்டர்கள் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.196 முதல் ரூ.218 வரை நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்ந்தது.
Advertisement
அதாவது, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாள்கள் என்று இருந்தது தற்போது 25 நாள்கள் வரை உயர்த்தப்பட்டது.