முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை...
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என நிரூபிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவருடைய அரசு இல்லத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பகுதி எரிந்த நிலையில் இருந்த அந்தப் பணம் பின்னா் மாயமானது.
இந்த சா்ச்சை தொடா்பாக நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவைத் தலைவர்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
மக்களவையில் தீா்மானம் ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கா்நாடக உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பி.வி.ஆச்சாா்யா ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா்.
இந்த நிலையில், முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபனம் ஆனதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள ஒரு அறையில் கணிசமான எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தின் உரிமை அல்லது அங்கு அது இருந்ததற்கான காரணம் குறித்து திருப்திகரமான விளக்கத்தை யஷ்வந்த் வர்மா அளிக்கவில்லை என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த பணத்தை வேண்டுமென்றே யாராவது வைத்து சதி செய்திருக்கலாம் என்ற யஷ்வந்த் வர்மாவின் கூற்றை ஏற்கும் வகையில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் செயல்பாடு அரசியலமைப்பை நிர்வகிக்கும் நீதிபதியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நிறுவனப் பொறுப்புணர்வு ஆகிய தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வா்மா, தனது பதவியை கடந்த ஏப்ரம் மாதம் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Allegations against former judge Yashwant Varma are true! Parliamentary committee announcement!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.