ஜார்க்கண்டில் நக்சல் வேட்டை தீவிரம்: 103 பேர் கைது, 46 பேர் சரண்!
ஜார்க்கண்டில் இதுவரை நக்சல்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக..
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை 103 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் டிஜிபி தடாஷா மிஸ்ரா தெரிவித்தார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலக் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நக்சலிசத்தால் விடுக்கப்பட்ட சவாலை ஜார்க்கண்ட் காவல்துறை கணிசமாகக் குறைத்துள்ளது. இக்காலகட்டத்தில் 98 ஆயுதங்கள், 7,470 தோட்டாக்கள், 11 கிலோ வெடிபொருள்கள், மூன்று ஐஇடி-க்கள், மிரட்டிப் பறிக்கப்பட்ட ரூ. 6 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
துணிச்சல், வீரம், தொழில்முறை உத்திகள் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் மாநிலத்தில் நக்சலிச சவாலை ஜார்க்கண்ட் காவல்துறை கணிசமாகக் குறைத்துள்ளது.
இதன் விளைவாக, ஜனவரி முதல் ஆகஸ்ட் 5 வரை மொத்தம் 103 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். 46 கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர், 22 போலீஸார் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களில், ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த சிபிஐ (மாவோயிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் மிசிர் பெஸ்ரா கைது செய்யப்பட்டார். அதேசமயம் தடைசெய்யப்பட்ட அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினரான பதிராம் மஞ்சி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
ஜனவரி முதல் ஜூலை வரை குற்றக் கும்பல்களைச் சேர்ந்த மொத்தம் 193 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களிடமிருந்து 63 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சைபர் குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மிஸ்ரா தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.