FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிணமூல் காங். அலுவலகத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை

மேற்கு வங்கத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டது குறித்து...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 10:04 am IST
முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியுடன் ஆஷிஷ் பானர்ஜி - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, 2001 முதல் 2026 வரையில் ராம்பூர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். மேலும், இவர் மாநில பள்ளிக் கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த 2026 பேரவைத் தேர்தலில் பாஜகவின் துருவா சாஹாவிடம் 24,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஆஷிஷ் பானர்ஜி தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, இவர் அரசியலில் பெரிதாக எதுவும் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு எதிராக ஊழல் தொடர்பான விசாரணைகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பீர்பூம் மாவட்டத்தில் ராம்பூர்ஹட்டில் உள்ள தனது இல்லத்துக்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஆஷிஷ் பானர்ஜி தூக்கிட்ட நிலையில், இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது. மேலும், அங்கிருந்து தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, ஆஷிஷ் பானர்ஜியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

summary

Former Bengal deputy speaker Ashis Banerjee found dead at TMC office in Birbhum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments