எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்!
பிரசாந்த் கிஷோர் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டது பற்றி...
பிகார் சட்டப்பேரவையில் பாங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏவாக பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பேரவைத் தலைவர் பிரேம் குமார் முன்னிலையில் அவர் உறுதிமொழி எடுத்து எம்எல்ஏ-வாக பதவியேற்றார். பங்கிப்பூர் தொகுதி பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனின் தொகுதியாகும்.
நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதன் மூலமாக பிகாரில் பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.