முகப்பு
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் கலவரம் : 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு!

பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகும் பழங்குடி சமூகத்தினரிடையே மோதல்போக்கு அதிகரித்து வருவது குறித்து...

Updated On : 11 பிப்ரவரி 2026, 11:08 am IST
கலவரத்தில் தீக்கிரையான வீடுகள் - படம் - ஏஎன்ஐ
பகிர்:

மணிப்பூரில் குகி - நாகா பழங்குடி சமூகத்தினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டு, பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த சில நாள்களில் பழங்குடி சமூகத்தினரிடையே மீண்டும் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது.

மணிப்பூரின் உக்ருல் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் குகி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதனிடையே உக்ருலில் உள்ள லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் குகி - நாகா இன மக்களிடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த மோதலில் கிராமத்தைச் சேர்ந்த 10 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் குகி - மைதேயி சமூகத்தினரிடையே முன்பு கலவரம் ஏற்பட்டதால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. பாதுகாப்புப் படையினரும் திரும்பப் பெறப்படவில்லை. இதற்கு மத்தியில் நாகா - குகி இன மக்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

நாகா இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிப்ரவரி 7 ஆம் தேதி தாக்கப்பட்டு, அவரின் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய நபர்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததாகவும், துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் உக்ருல் மாவட்டத்தில் அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

summary

Manipur Ukhrul violence tensions between Kuki-Zo and Tangkhul Naga

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.