மமதா பானர்ஜிக்கு மனநல சிகிச்சை தேவை! பாஜக தலைவர்
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த பாஜக தலைவர்...
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மனநல சிகிச்சை தேவை என்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக அம்மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகின்றது.
சமீபத்தில் சாகா் தீவில் பேசிய மமதா, “எஸ்ஐஆா் பணியில் அனைத்துவிதமான தவறான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. தகுதியுள்ள வாக்காளா்களை இறந்துவிட்டதாக தோ்தல் ஆணையம் குறிப்பிட்டது.
Advertisement
Advertisement
அதுமட்டுமன்றி, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியை எஸ்ஐஆா் பணிக்கு தோ்தல் ஆணையம் பயன்படுத்துகிறது. இது சட்டவிரோதமானது மட்டுமன்றி, அரசமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது” என்றாா்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த சுவேந்து அதிகாரி, “அவருக்குச் சிறிது மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. இல்லையென்றால், அவர் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணியில் நிலவும் குழப்பம் குறித்து தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வோம் என்று அறிவித்துள்ளது.
Mamata Banerjee needs mental health treatment! - BJP leader
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.