பிரதமர் மோடிக்காகப் பிரசாரம் செய்தேன்; ஆனால், என் கட்சியை அவர் அழிக்கிறார் - உத்தவ் வேதனை!
பிரதமர் மோடி குறித்து சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வேதனை...
பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியை அழிக்க முயல்வதாக, சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் முதன்மையான சிவசேனை கட்சி, முன்னாள் முதல்வர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மோடி பிரதமாரவதற்குப் பிரசாரம் செய்ததை நினைத்து வருந்துவதாக, சிவசேனை (உத்தவ்) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“மோடி பிரதமராவதற்கு 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரசாரம் செய்ததை நினைத்து நான் வருத்தமும் கோபமும் அடைகிறேன். அவருக்கு இரண்டுமுறை நான் உதவி செய்தபோதும் அவர் (பிரதமர் மோடி) என் கட்சியை உடைத்துவிட்டார்.
அவர் நிச்சயம் பிரதமராக வேண்டுமென நான் கூறியிருந்தேன். ஆனால், அவர் இப்போது என்னை முடித்துவிட வேண்டும் எனக் கூறுகிறார்.
இப்போது, அவர்கள் பாலாசாகேப் தாக்கரே இல்லை, அதனால் சிவசேனையை முடித்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அவர்களால் அதைச் செய்ய முடியாது. பாலாசாகேப் இருந்தவரை பாஜகவினர் நேர்வழியில் செயல்பட்டனர்.” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மும்பை நகரத்தைத் தனியாகப் பிரிப்பது பாஜகவின் நெடுநாள் கனவு எனவும் அவர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Shiv Sena (Uddhav) party leader Uddhav Thackeray's statement that Prime Minister Narendra Modi is trying to destroy his party has caused a major stir.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.