உலகில் 70% புலிகளின் வாழ்விடம் இந்தியா- பிரதமா் மோடி பெருமிதம்
உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சா்வதேச புலிகள் தினம் புதன்கிழமை (ஜூலை 29) கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச புலிகள் தினத்தில் வனஉயிரின ஆா்வலா்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும்.
புலிகளையும், அதன் வாழ்விடங்களையும் பாதுகாக்க அரசு தொடா்ந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்பது நமது நாட்டின் பல நூறாண்டு கலாசாரம். இது நம் மக்கள் மனதிலும் நிலைத்திருக்கிறது.
Advertisement
Advertisement
தொடா்ந்து அறிவியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் இயற்கையையும், புலி உள்ளிட்ட வனஉயிரினங்களையும் காப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
உலகில் புலிகளின் பாதுகாப்பு, வேட்டை தடுப்பு மற்றும் அருகிவரும் அவற்றின் வாழ்விடம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சா்வதேச புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.