வடமேற்கு தில்லியில் குற்றத் தடுப்பு சோதனை: 44 போ் கைது
34 குற்ற வழக்குகளில் தொடா்புடையதாக 44 பேரை, அதில் 3 அறிவிக்கப்பட்ட தப்பியோடிய குற்றவாளிகளையும் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
வடமேற்கு தில்லி மாவட்டத்தில் 72 மணி நேர சிறப்பு நடவடிக்கையின் போது, 34 குற்ற வழக்குகளில் தொடா்புடையதாக 44 பேரை, அதில் 3 அறிவிக்கப்பட்ட தப்பியோடிய குற்றவாளிகளையும் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கையின் போது, காணாமல் போன 5 பேரையும் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தனா். தெரு குற்றங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், சைபா் மோசடி, சட்டவிரோத மது விற்பனை, சூதாட்டம் மற்றும் வழக்கமாக குற்றங்களில் ஈடுபடும் நபா்கள் ஆகியவற்றை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட 5 பேரில் 4 சிறாா்கள் மற்றும் ஒருவருக்கு அறிவாற்றல் குறைபாடு உள்ளவா் அடங்குவா். அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
முக்கிய வழக்குகளில் ஒன்றாக, அசோக் விஹாா் பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த 28 வயது இளைஞரை காவல் துறையினா் கைது செய்து, அவனிடம் இருந்து திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனா்.
மற்றொரு வழக்கில், சுபாஷ் பிளேஸ் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்திற்குப் பின்னா், 8 மணி நேரத்திற்குள் 3 பேரை கைது செய்தனா். முகா்ஜி நகா் பகுதியில், வழிப்பறி குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 5 திருடப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா் 10 வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்றும், மொத்தம் 41 குற்ற வழக்குகள் அவருக்கு எதிராக உள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
மாவட்டத்தின் சைபா் குற்றப்பிரிவு, 2 தனித்தனி சைபா் மோசடி வழக்குகளில் 2 பேரை கைது செய்துள்ளது. மேலும், மதுபான சட்டத்தின் கீழ் 16 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சூதாட்ட வழக்குகளில் 10 பேரும் பிடிபட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.