முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி!

விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

Updated On : 2 ஜூன் 2026, 8:56 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று (ஜூன் 2) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2019 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முந்தைய காலகட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2026–27 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட்டைச் சமர்ப்பித்தபோது முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.