சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!
தொடர் குளறுபடிகள் எதிரொலி... சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!
புது தில்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவரும் செயலரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறையில் பெரும்பாலான குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்தது. சிபிஎஸ்இ-யின் ஓஎஸ்எம் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளை விசாரிக்க சிபிசி தலைவர் எஸ். ராதா சௌஹான் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ தலைவராக பொறுப்பு வகித்த ராகுல் சிங் (ஐஏஎஸ்), செயலர் பொறுப்பு வகித்த ஹிமான்ஷு குப்தா (ஐஏஎஸ்) ஆகிய இருவரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
The CBSE Chairman and Secretary have been transferred
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.