சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!
தொடர் குளறுபடிகள் எதிரொலி... சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!
புது தில்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவரும் செயலரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திரையில் மதிப்பிடும் முறையில் பெரும்பாலான குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக புகார் எழுந்தது. சிபிஎஸ்இ-யின் ஓஎஸ்எம் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளை விசாரிக்க சிபிசி தலைவர் எஸ். ராதா சௌஹான் தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ தலைவராக பொறுப்பு வகித்த ராகுல் சிங் (ஐஏஎஸ்), செயலர் பொறுப்பு வகித்த ஹிமான்ஷு குப்தா (ஐஏஎஸ்) ஆகிய இருவரும் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement