இந்தியா வந்தார் வெனிசுவேலா இடைக்கால அதிபர்!
வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்தியா வந்துள்ளது குறித்து...
வெனிசுவேலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (ஜூன் 3) மாலை இந்தியா வந்தடைந்தார். 5 நாள் பயணமாக தலைநகர் தில்லுக்கு வந்த அதிபர் டெல்சி பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் அதிபர் டெல்சி எரிசக்தி, பாதுகாப்பு, முதலீடு, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Advertisement
Advertisement
இத்துடன், வெனிசுவேலாவின் வெளியுறவு, பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிபர் டெல்சியுடன் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே, 2015, 2019, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்திய பயணத்தை மேற்கொண்ட டெல்சி ரோட்ரிக்ஸ் 6 ஆவது முறையாக இன்று இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Venezuela's Acting President Delcy Rodriguez has arrived in India on an official visit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.