முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் உற்சாகத்தில் திளைத்த அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலத் தலைமையகத்திற்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக தொண்டர்கள்.
பகிர்:

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் உற்சாகத்தில் திளைத்த அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலத் தலைமையகத்திற்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை கையில் ஏந்தியிருந்த கட்சித் தொண்டர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டும், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியைப் பாராட்டியும், ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

மேலும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டதுடன், அவ்வழியே சென்றவர்களுக்கும் அவற்றை வழங்கினர். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

Advertisement

பல்வேறு விதிமீறல்களால் ஃபால்டா தொகுதியில் மட்டும் தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பாஜக அறுதிப் பெரும்பான்மைக்கு மேலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிட்டதட்ட தோல்வி முகம் காணப்படுகிறது.

summary

Ecstatic BJP workers broke into celebrations outside the party's state headquarters in Kolkata as the organisation was leading in the West Bengal assembly polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.