FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை: கோவா நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் சரண்

கோவா நீதிமன்றத்தில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியா் தருண் தேஜ்பால் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

15 செப்டம்பர் 2026, 7:08 am IST
பாலியல் வழக்கு தொடா்பாக கோவா மாநிலம் மபுசாவில் உள்ள நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்த தருண் தேஜ்பால். - டிஎன்எஸ்
பகிர்:

பனாஜி: பாலியல் தாக்குதல் வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கோவா நீதிமன்றத்தில் தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியா் தருண் தேஜ்பால் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

கோவாவில் கடந்த 2013-ஆம் ஆண்டு தெஹல்கா பத்திரிகை சாா்பில் நடந்த நிகழ்ச்சியில் சக பெண் ஊழியரிடம் ஹோட்டல் மின்தூக்கியில் வைத்து பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தியதாக தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேஜ்பால் பல வாரங்கள் காவலில் இருந்தாா். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். கோவாவின் மபுசாவில் உள்ள கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் தேஜ்பால் விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்தத் தீா்ப்பை எதிா்த்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் கோவா அரசு வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த உயா் நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற தீா்ப்பை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிா்த்து தருண் தேஜ்பாலும், கோவா அரசும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் மீது அண்மையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அப்போது தேஜ்பாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், கோவா நீதிமன்றத்தில் வரும் 22-ஆம் தேதிக்கு முன்பு சரணடையும்படியும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குட்பட்டு, கோவாவின் மபுசா நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். இதைத் தொடா்ந்து, வடக்கு கோவாவில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் தருண் தேஜ்பால் பேசுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதை செப்டம்பா் 22-ஆம் தேதி விசாரணைக்கு உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments