அமெரிக்க அழுத்தத்துக்கு சரணடைந்த மோடி: ராகுல் காந்தி
அமெரிக்க அழுத்தத்துக்கு பிரதமர் மோடி சரணடைந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியது குறித்து...
அமெரிக்க அழுத்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவின் பணப் பரிவா்த்தனை நிறுவனங்கள் நீண்ட காலமாக இந்தியாவின் கட்டணமில்லா எம்டிஆா் கொள்கையை எதிா்த்து வந்தன.
அந்த நிறுவனங்களுக்கு ஏற்ப எம்டிஆா் கொள்கையை மாற்றுவதற்கு தற்போது மோடி அரசு வழிவகை செய்துள்ளது. அமெரிக்காவுடனான இந்தியாவின் வா்த்தக ஒப்பந்தத்தில் சமரசமடைந்த பிரதமா் மோடி, மீண்டும் ஒருமுறை அமெரிக்க அழுத்தத்துக்கு சரணடைந்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.