தனியார் கல்லூரியில் ரத்த தான முகாம்
சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் அருகே ஆசான் நினைவு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் வழியில் மேடவாக்கம் அருகே ஆசான் நினைவு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.
இந்தக் கல்லூரி வளாகத்தில், நிர்வாகத்தின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) ரத்த தான முகாம் நடைபெற்றது. அப்போது, பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் முன்வந்து ரத்த தானம் செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, எழும்பூர் அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனை குழுவினர் ரத்தங்களை சேகரித்துச் சென்றனர்.
ஆசான் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட(என்எஸ்எஸ்) அதிகாரியும், தமிழ் பேராசிரியருமான பி.ரமேஷ் குமார் தலைமையில், ரத்ததான முகாமுக்குத் தேவையான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் மாணவர்கள் மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.