பொருளாதார நெருக்கடி: ஒரு பகுதி தங்கத்தை ஆர்பிஐ விற்றிருக்கலாம்! ப்ளூம்பெர்க் அறிக்கை
பொருளாதார நெருக்கடிக்கு இடையே அந்நியச் செலாவணியை பலப்படுத்தும் வகையில், ஆர்பிஐ ஒரு பகுதி தங்கத்தை விற்றிருக்கலாம் என ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியீடு
மேற்காசிய போரால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், குறைந்து வரும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி, கையிருப்பில் இருந்த தங்கத்தை குறைந்த அளவில் விற்றிருக்கலாம் என ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியானது அமெரிக்க டாலரில் 12 பில்லியன் மதிப்புள்ள தங்கத்த்தை மே 22ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களக்குள் விற்பனை செய்து, 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு பணங்களை வாங்கியிருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்காசிய போர்களால், உள்நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்திலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி சொத்துகளைப் பாதுகாக்க, இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்றிருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
Advertisement
Advertisement