கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

வங்கக் கடலில் உருவாகிறது புயல்!

உருவாகிறது வடகிழக்கு பருவமழையின் முதல் புயல்.

DIN

வங்கக் கடலில் அக். 23 ஆம் தேதி புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பால இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இதன் தாக்கத்தால், அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 22 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக். 23-ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-மேற்கு வங்கம் இடையே அக். 24 ஆம் தேதி காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த 'டானா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT