FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு

‘ஸ்டாா்ட்அப் (புத்தாக்கத் தொழில்) நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் வரி சீர்திருத்தங்களை’ மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

1 பிப்ரவரி 2025, 3:09 pm IST
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
பகிர்:

புது தில்லி : ‘ஸ்டாா்ட்அப் (புத்தாக்கத் தொழில்) நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வரி சீர்திருத்தங்களை’ மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

பொருளாதாரத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் பங்கை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளை வழங்குவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாகிறது.

அதன்படி ‘ஸ்டாா்ட்அப் இந்தியா’ திட்டத்தின்கீழ், நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் தொடங்கப்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி திட்டம் இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிலப்பரப்பை மாற்றியுள்ளது, மேலும் இது ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை வழங்கவும், உள்நாட்டு மூலதனத்தை அணுகவும், 2016 ஆம் ஆண்டில் ரூ.10,000 கோடியில் ஸ்டார்ட்அப்களுக்கான நிதி (எப்எப்எஸ்) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், அதன் நிதிக்கு மேலும் ரூ.10,000 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2025-26 பட்ஜெட்டில், ‘ஸ்டாா்ட்அப் (புத்தாக்கத் தொழில்) நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், ரூ.10,000 கோடி மதிப்புள்ள புதிய நிதியுதவி மற்றும் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வரி சீர்திருத்தங்களை’ மத்திய நிதி அமைச்சா் நிா்மலா அறிவித்தாா்.

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். மேலும் எம்எஸ்எம்இ-களுக்கு வழங்க ரூ.1.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் தொடங்கும் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.

உதயம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரம்புடன் கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டில் ஸ்டாா்ட்அப் அமைப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் தற்போதுவரை 1.17 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments