எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணையத் தயார்: ஓபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவது தொடர்பாக...
எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேனியில் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:
”வரும் 2026 பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்தால் வாழ்வு, இல்ல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வே.
Advertisement
Advertisement
செங்கோட்டையன் அதிமுகவுக்கு விசுவாசமானவர், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பவர். அவர் மீது எங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை.
இதையும் படிக்க: அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி: ஆர்.பி. உதயகுமார்
எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறோம்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது; மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்று பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.