FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பட்ஜெட்: சென்னை வேளச்சேரியில் 3 கிமீ தூரத்துக்கு புதிய மேம்பாலம்!

வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Updated On : 14 மார்ச் 2025, 10:11 am IST
பகிர்:

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது சென்னை மாநகராட்சிக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

Advertisement

Advertisement

'வேளச்சேரி, கிண்டி பகுதியில் உள்ள 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் 3 கிமீ தூரத்திற்கு ரூ. 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில்வே துறையுடன் இணைந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 70 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கொடுங்கையூர் எரிவாயு நிலையத்தில் உயிரி எரிவாயு, திடக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.

தாம்பரம் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒரு புதிய ஆலை அமைக்கப்படும்.

ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)

ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் அமைக்கப்படும்' என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments