எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது விபத்து: ஒருவர் பலி
சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானது குறித்து...
சென்னை பெரம்பூரில் எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.
சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதன்(25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த தீ காயமும், பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Regarding the death of one person in a cylinder explosion during the filming of S.J. Suryah's movie 'Killer' in Perambur, Chennai...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.