தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து இன்று (மே 17) தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கே. ராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தமிழ் சினிமா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவ்வபோது கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
Advertisement
சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்த கே. ராஜன், பாம்பு சட்டை, துணிவு, பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].