FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் பாணியில் செயல்படும் ஸ்மார்ட் பூட்டுகள்!

அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் பாணியில் செயல்படும் ஸ்மார்ட் பூட்டுகள் பற்றி...

10 செப்டம்பர் 2026, 6:13 pm IST
ஸ்மார்ட் பூட்டு
பகிர்:

இந்த நவீன காலத்தில், இன்னுமா சாவிகளைக் கொண்டு பூட்டுப் போட்டுக் கொண்டிருக்க முடியும். சொந்த வீடு என்றால், ஸ்மார்ட் பூட்டுகள்தான் சிறந்த தேர்வு.

க்யூபோ, கோத்ரேஜ், லாவ்னா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது ஸ்மார்ட் பூட்டுகள் தயாரிப்பில் இறங்கி வெற்றிக் கொடி நாட்டுகின்றன.

அப்படி ஸ்மார்ட் பூட்டுகளில் என்னவெல்லாம் சிறப்பம்சங்கள் உள்ளன என்றால். ஒரு முறை அல்ல இரண்டு முறைகள் அல்ல நான்கு விதமான பூட்டுத் திறப்பு முறைகளைப் பயன்படுத்தலாம்.

Advertisement

Advertisement

அவ்வளவு ஏன், கை விரல் ரேகையைப் பதிவு செய்துகூட ஸ்மார்ட் பூட்டுகளைத் திறந்து கொள்ளலாம்.

முந்தைய குலேப காவலி படத்தில் வரும் அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் என்று சொன்னால் கதவு திறப்பது போன்ற பாணியில் செயல்படும் ஸ்மார்ட் பூட்டுகள், அதாவது பாஸ்கோடு வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

இல்லை... இல்லை... இன்னும் புது விதமாக இருக்க வேண்டும் என்றால், பழைய மந்திரவாதி படங்களில் குகைக் கதவைத் திறக்க அருகில் இருக்கும் கல்லை அசைக்க வேண்டும் என்பது போல, ஒரு சில நுணுக்கங்களைப் பின்பற்றி பூட்டுக்குள் சாவியை நுழைக்கும் துவாரத்தை திறந்து பிறகு சாவியைக் கொண்டு திறக்கும் வகையிலும் ஸ்மார்ட் பூட்டுகள் வந்துவிட்டன.

வைஃபையில் இயங்கும் பூட்டுகள், செயலியில் திறக்கும் பூட்டுகளும் வந்துவிட்டன.

ஸ்மார்ட் பூட்டுகளை நிறுவனங்களே வந்து இன்ஸ்டால் செய்து தருகின்றன. சில ஆண்டுகளுக்கு வாரண்டிகள், கியாரண்டிகளும் கிடைக்கின்றன.

ஓடிபி, பின் எண் செட் செய்து அதனைப் போட்டு திறப்பது, செல்போன் செயலி மூலம் ஓபன் செய்வது என விதவிதமாக வந்திருப்பதால் அதனை அவரவர் வசதிக்கேற்ப பார்த்து வாங்கிக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments