FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ரசிக்க... ருசிக்க...

மொறு மொறு வடை எப்படி தயாரிப்பது?

மிக்ஸியில் அரைக்க நேர்ந்தால், அதன் பிளேடுகளில் நடுவில் சிறிதளவு எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.

Updated On : 27 அக்டோபர் 2017, 4:40 pm IST
பகிர்:

தேவையானவை :

உளுந்து - 1 கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

Advertisement

Advertisement

  • உளுந்தை ஊற வைக்கவும்
  • ஊற வைத்த உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை க்ரைண்டரில் மையாக அரைக்கவும்
  • இந்த மாவில் கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும்
  • அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை எண்ணெயை காய வைக்கவும். 
  • உள்ளங்கை அளவு மாவை எடுத்துக் கொண்டு அதைச் சிறு உருண்டையாக்கி அதன் பின் வட்டமாகத் தட்டவும்.
  • அதன் நடுவில் தண்ணீர் தொட்டு துளை போடவும்
  • இப்போது வடை மாவை வாணிலியில் போடவும்.
  • இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டபின் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
  • பொடியாக‌ நறுக்கிய கீரையை சேர்த்து அரைத்து கீரை வ‌டையாக‌வும் சுட‌லாம்.

சில டிப்ஸ்

மாவை நைசாக அரைக்க வேண்டும். எந்தளவுக்கு என்றால் அரைத்து முடித்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்துக் கொண்டு ஊதினால் அது பஞ்சு போல் பறக்க வேண்டும். அப்படி அரைத்த மாவில் வடை சுட்டால் மொறு மொறுவென்று அதிக ருசியில் வடை சூப்பராக இருக்கும்.

மொறு மொறுவென்று வடை தயாரிக்க ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம்.

வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும். எனவே அளவாக நீர் விடவும். மேலும் மிக்ஸியில் அரைப்பதை விட க்ரைண்டரில் அரைப்பது சுவை அதிகமாக இருக்கும். 

மிக்ஸியில் அரைக்க நேர்ந்தால், அதன் பிளேடுகளில் நடுவில் சிறிதளவு எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments