FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சென்னையில் மேற்கு வங்க சேலைகள் கண்காட்சி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநில கைத்தறி நெசவாளர்கள் சார்பில் "ரங்க் மஹால்' பருத்தி சேலைகள் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Updated On : 21 அக்டோபர் 2016, 2:17 pm IST
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநில கைத்தறி நெசவாளர்கள் சார்பில் "ரங்க் மஹால்' பருத்தி சேலைகள் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேற்கு வங்க மாநில அரசின் கைத்தறித் துறையில் பதிவுபெற்ற "ரங்க் மஹால்' என்ற அமைப்பு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள சிறு அரங்கில், வங்க மாநில காட்டன் சேலைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த விற்பனைக் கண்காட்சி வரும் 24 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதில், மேறகு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காட்டன் சேலைகள், ஆர்கானிக் சேலைகள், கைத்தறி ஆடைகள், விலங்குகள், பழவகைகள் பார்டர் அமைந்த சேலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்தக் கண்காட்சி தொடர்பாக ரங்க் மஹால் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சர்மிஸ்தா தாஸ் பிஸ்வாஸ் கூறியபோது, "இந்தக் கண்காட்சியில் 250 -க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஜல்சூரிஸ் சேலைகள், ஜம்தானிஸ் சேலைகள், இயற்கை சாய கைத்தறி சேலைகள் உள்ளிட்ட 560 ரகமான சேலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ.700 முதல் ரூ.10 ஆயிரம் வரையாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments