உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாகவே உள்ளது. மாவுச்சத்து மிக்க உணவுப் பொருள் என்பதால் கார்போஹைட்ரேட் உடலில் அதிகம் சேர்வதால் உடல் எடையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாகவே உள்ளது. மாவுச்சத்து மிக்க உணவுப் பொருள் என்பதால் கார்போஹைட்ரேட் உடலில் அதிகம் சேர்வதால் உடல் எடையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
உண்மையில் உருளைக்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கிறதா? என்றால் இல்லை.
ஓர் உணவுப் பொருளில் எண்ணற்ற சத்துகள் இருக்கும். அதில் உள்ள ஒரே ஒரு மூலக்கூறுக்காக அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல. எந்த ஒரு உணவையும் அளவாக சாப்பிட்டாலே பலன் அதிகமாக இருக்கும். மேலும் அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.
Advertisement
Advertisement
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி, புரதம், நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஸ்டார்ச், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் உடல் எடையை நிர்வகிக்க உதவுவதுடன் உடலுக்கு நீரேற்றத்தையும் அளிக்கிறது.
இதையும் படிக்க | வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இவற்றைப் பயன்படுத்தலாமே!
எனவே, தினமும் ஒரு உருளைக்கிழங்கு சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மேலும் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து சாப்பிட வேண்டும். முடிந்தவரை எண்ணெய் சேர்க்காத வகையில் சாப்பிட்டால் உருளைக்கிழங்கால் உடல் எடை அதிகரிக்காது. மேலும் பசியை அடக்கும் ஓர் உணவுப்பொருள் இது என்பதால் உட்கொள்ளும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தும்.
கிலோ கணக்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரென்ச் பிரைஸ், ஆலு டிக்கி உருளைக்கிழங்கை நன்றாக எண்ணெய்யில் வறுத்து சாப்பிடுபவர்களுக்கு இது பொருந்தாது.
உருளைக்கிழங்கை சரியான அளவில் வேகவைத்து சாப்பிட்டால் உடலுக்கு சக்தி தருவதுடன் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ஆனால், நீரிழிவு நோயாளிகள் மட்டும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுமெனில் மருத்துவர்களின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.