தரமற்ற காய்கறி, பழங்களில் இருந்து எஸ்கேப் ஆவது எப்படி?
இதில் இன்றைய நாகரீக யுகத்தின் மிக முக்கியமான பிரச்னையான காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தைக் கணித்து ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வதற்கான குறிப்புகளை வழங்கியிருக்கிறோம்.
கடைக்குப் போய் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவது முதல் அதை சமைத்து சாப்பிடுவது வரை சிலருக்கு ஆயிரம் சந்தேகங்கள். பலர் எதையும் கண்டு கொள்வதே இல்லை. போனோமா... வாங்கினோமா? சமைத்தோமா? மிச்சமானால் ஃப்ரிஜ்ஜில் எடுத்துப் போட்டோமா? தீரும் வரை சுட வைத்து சுட வைத்து சாப்பிடுவோமா? என்றிருக்கிறார்கள். இதில் வயது வித்யாசமே இல்லை. சமையலில் தேர்ந்தவர்கள், ஆரோக்யத்தில் அக்கறை கொண்டவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். பிறகு யாரெல்லாம் அப்படிச் செய்கிறார்கள் என்றால்? சமைப்பதையும், சாப்பிடுவதையும் வெறும் ஒரு கடமையாகவும், நிர்பந்தமாகவும் நினைக்கிறவர்கள் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள். அது தவறு. இப்படியான மனோபாவம் இருப்பதால் தான் விருந்தென்று நினைத்துக் கொண்டு நாம் பெரும்பாலும் விஷத்தைச் சாப்பிட வேண்டியதாகி விடுகிறது. சமைத்த உணவுகளை அன்றைன்றைக்கே சாப்பிட்டு முடித்து விடுவது தான் உடல்நலனுக்கு நல்லது. சில உணவுப் பொருட்களை மறுநாள் வரை வைத்திருக்கலாம். ஆனால் வாரக் கணக்கில் வைத்துச் சாப்பிடுவது ஒன்று வற்றல், வடாம்களாக இருக்க வேண்டும் அல்லது ஊறுகாயாக மட்டுமே இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக் கூடியவர்கள் என்றால் உப்புக்கண்டத்தையும், கருவாட்டையும் தவிர்த்து வேறு எதையுமே தயவு செய்து ஃப்ரிஜ்ஜில் சேமித்து வைத்து வாரக் கணக்கில் பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு வரக்கூடிய பலவிதமான உடல்நலக் கேடுகளுக்கு அது தான் முக்கியமான காரணமாகி விடுகிறது என்பதை நினைவில் வையுங்கள்.
இந்தக் காணொலியில் காய்கறி, பழங்களை எப்படித் தரம் பார்த்து வாங்குவது? அவற்றை எத்தனை நாட்களுக்குள் உண்டு முடிக்க வேண்டும், காய்கறி மற்றும் பழங்களின் மேற்புறத்தில் படியும் ரசாயனக் கலப்பை எப்படி நீக்குவது என்பன போன்ற தகவல்களைப் பற்றி அலசியுள்ளோம்.
இது தினமணியின் டீ பிரேக் நேரம்.
Advertisement
Advertisement
இதில் பல விஷயங்களைப் பற்றி அலசி வருகிறோம்.
இதற்கு முன் இரண்டு டீ பிரேக் தொடர்கள் முடிந்துள்ளன.
இது டீ பிரேக் - 3
இதில் இன்றைய நாகரீக யுகத்தின் மிக முக்கியமான பிரச்னையான காய்கறிகள் மற்றும் பழங்களின் தரத்தைக் கணித்து ஆரோக்யமான வாழ்க்கை வாழ்வதற்கான குறிப்புகளை வழங்கியிருக்கிறோம்.
வாசகர்கள், மறவாமல் அனைத்து டீ பிரேக் தொடர்களையும் கண்டு உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் தினமணி யூ டியூப் சேனலையும் சப்ஸ்கிரைப் செய்ய மறவாதீர்கள்.
நன்றி!
Related Article
‘நெல்லை முதல் டெல்லி வரை’ கொள்ளையர்களை விரட்டும் பெண்களின் துணிவு! (விடியோ இணைப்பு)
‘உருவக்கேலி முதல் தெலுங்கானா கவர்னர் வரை’ தமிழிசையின் அரசியல் ராஜபாட்டை!
ட்ரெயின்ல பிச்சை எடுக்கற மாதிரி பாடாதன்னு இனிமே யாரையாவது கிண்டல் பண்ணீங்கன்னா தெரியும் சேதி!
ஆண்கள்... பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக்பாஸ் விவாதத்தின் மீதான தினமணி டீ பிரேக் அரட்டை!
பூச்செடிகள், காய்கறிச் செடிகளுடன் பேசும் வழக்கமிருக்கா உங்களுக்கு?