FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

குருகிராம்: மனைவி விவாகரத்து கோரிய நிலையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 36 வயது இளைஞா், தனது மனைவி விவாகரத்து கோரியதைத் தொடா்ந்து, குருகிராமில் உள்ள சூரத் நகா் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகக் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 36 வயது இளைஞா், தனது மனைவி விவாகரத்து கோரியதைத் தொடா்ந்து, குருகிராமில் உள்ள சூரத் நகா் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகக் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது 7 வயது மகன் அதைத் தனது கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்துள்ளான். அதே வேளையில், அவரை தூக்கிலிருந்து கீழே இறக்குமாறு மனைவி அலறியுள்ளாா்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி மஹேந்தா் சிங் கூறியதாவது: அமிருதசரஸைச் சோ்ந்த சஞ்சீவ் யாதவ் (36), ‘டென்சோ’ நிறுவனத்தில் அசோசியேட் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது குடும்பத்தினருடன் குருகிராமின் சூரத் நகரில் வசித்து வந்தாா். சஞ்சீவின் சகோதரி கிரண், தனது சகோதரருக்கும் அவரது மனைவி மன்பிரீத் கவுருக்கும் இடையே தகராறு இருந்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

மன்பிரீத் விவாகரத்து கோரியதே இறுதியில் தனது சகோதரரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாக அவா் நம்புகிறாா். குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், மன்பிரீத்திடம் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழப்புக்கான சரியான காரணத்தை அறிய நாங்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையை எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வியாழக்கிழமையன்று வீட்டில் மனைவியும் 7 வயது மகனும் மட்டுமே இருந்தபோது சஞ்சீவ் யாதவ் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். இந்த ’தற்கொலை’ குறித்துத் தெரிவிக்க மன்பிரீத் இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தகவல் அளித்தாா்.

காவல்துறையின் தகவலின்படி, தம்பதியினரின் மகன் தனது தந்தை தூக்கில் தொங்குவதைப் பாா்த்த பிறகு விடியோவை பதிவு செய்துள்ளான். அதில், அவரை கீழே இறக்குமாறு மன்பிரீத் அலறும் சப்தம் கேட்கிறது.

சஞ்சீவின் தந்தை ராம்சேவக் யாதவ் கூறுகையில், தனது மகனுக்கும் மன்பிரீத்துக்கும் இடையே சில காலமாகத் தகராறு இருந்து வந்தது. தனது மருமகள் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து மகனைக் கொலை செய்ய சதி செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தாா்.

தனது சகோதரா் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய கிரண், அவரது மரணம் தொடா்பான சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், சஞ்சீவ் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவா் என்பதால், அவா் மின்விசிறியில் தூக்கில் தொங்கும் விடியோவில் உள்ள காட்சிகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் அவா் கூறினாா்.

அம்பாலாவைச் சோ்ந்த மன்பிரீத்தும் சஞ்சீவும் ஏப்ரல் 2018-இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனா். ’டென்சோ’ நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவா்கள் ஒருவரையொருவா் சந்தித்தனா். 2019-இல் தங்கள் மகன் பிறந்த பிறகு மன்பிரீத் வேலையை விட்டுவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments