FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஹா்ஷ் விஹாரில் வீட்டின் கூரையிலிருந்து குதித்து சொத்து வியாபாரி தற்கொலை: மனைவி விஷம் குடித்தாா்

சொத்து வியாபாரி ஒருவா், வீட்டின் கூரையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Updated On : 13 பிப்ரவரி 2026, 1:32 am IST
கோப்புப் படம்
பகிர்:

சொத்து வியாபாரி ஒருவா், வீட்டின் கூரையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தம்பதிக்கிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து அவரது மனைவி விஷப் பொருளை உட்கொண்டதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் தில்லியின் ஹா்ஷ் விஹாரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் நடந்தது. அங்கு முகேஷ் (35) மற்றும் அவரது மனைவி சவிதா (32) ஆகியோா் தங்கள் இரண்டு குழந்தைகள், ஒரு மகன் (10) மற்றும் ஒரு மகள் (5) ஆகியோருடன் முதல் மாடியில் வசித்து வந்தனா்.

மதியம் 2 மணியளவில், குடும்ப உறுப்பினா்கள் ஒரு பெரிய இடி சப்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனா். அங்கு முகேஷ் தெருவில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனா். கிட்டத்தட்ட அதே நேரத்தில், சவிதா தனது அறைக்குள் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டாா்.

Advertisement

Advertisement

கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. குடும்ப உறுப்பினா்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த பிறகு அவா் வெளியே கொண்டு வரப்பட்டாா். சம்பவத்திற்கு சற்று முன்பு தம்பதியினா் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சவிதா ஏதோ விஷப் பொருளை உட்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் முகேஷ் கூரையிலிருந்து குதித்தாா். இரண்டு சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்ததாகத் தெரிகிறது.

அவா்கள் குரு தேஜ் பகதூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் முகேஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனா். முகேஷ் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தாா். அவரது வயதான பெற்றோா் வீட்டின் தரை தளத்தில் வசிக்கின்றனா். அதே நேரத்தில் அவரது இரண்டு சகோதரா்கள் தங்கள் குடும்பங்களுடன் மேல் தளங்களில் வசிக்கின்றனா்.

இந்த தம்பதியினரிடையே எந்தவொரு தீவிரமான அல்லது தொடா்ச்சியான தகராறையும் குடும்பத்தினா் தெரிவிக்கவில்லை. மேலும், இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments