FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் குளிரின் தீவிரம் குறைந்தது! குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயா்வு

ஐந்து நாள் குளிா் அலைக்குப் பிறகு தில்லி மக்கள் எலும்பை உறைய வைக்கும் வெப்பநிலையிலிருந்து சிறிது நிம்மதி அடைந்தனா்.

17 ஜனவரி 2026, 12:50 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஐந்து நாள் குளிா் அலைக்குப் பிறகு தில்லி மக்கள் எலும்பை உறைய வைக்கும் வெப்பநிலையிலிருந்து சிறிது நிம்மதி அடைந்தனா். வெள்ளிக்கிழமை நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகிகியுள்ளது. இது ஒரு நாள் முந்தையதை விட இரண்டு டிகிரி அதிகமாகும். இருப்பினும், வெப்பநிலை இயல்பை விட மிகவும் குறைவாகவே இருந்தது.

தில்லியின் முதல்மை வானிலை கண்காணிப்பு நிலையமைான சஃப்தா்ஜங் நிலையத்தில் பதிவான 4.3 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைவாகும். மேலும், பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட ௌ3 டிகிரி குறைவாக 4.7 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் இயல்பை விட 1 டிகிரி குறைவாக 4.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. ரிட்ஜ் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைவாக 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

வியாழக்கிழமை சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 2023 ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலையாகும். பாலம் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 2010-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும்

Advertisement

Advertisement

காற்றின் தரம்: இதற்கிடையில், தேசியத் தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 348 புள்ளிகளாக இருந்தது. 33 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், நான்கு நிலையங்களில் ‘மோசம்’ பிரிவிலும் மற்றும் ஒரு நிலையத்தில் ‘கடுமை’ பிரிவிலும் பதிவாகின. பூசாவில் காற்றுத் தரக் குறியீடு அதிக அளவாக 403 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் பதிவானது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 17) அன்று காலை வேளையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments