FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நூல் அரங்கம்

தீர்வுகள் இங்கே!!! (பாகம்1)

'இறைவன் உதவி' என்ற பகுதியில் நேர்மையானவர்களுக்கும், உண்மையானவர்களுக்கும் ஏற்படும் துன்பத்திலிருந்து இறைவன் எந்த வகையில் உதவுகிறார் என்பதை நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 6:25 pm IST
பகிர்:

தீர்வுகள் இங்கே!!! (பாகம்1)-ஞானகுரு கிருஷ்ணதாசன்; பக். 210; ஸ்ரீ கிருஷ்ண ஜோதி அறக்கட்டளை, 75501 50723. ✆ 94444 55705.

பிரச்னைகளுக்கு தீர்வு எங்கிருக்கிறது என ஒவ்வொரு பகுதியாக தனக்கே உரிய பாணியில் கதைகள், அனுபவங்கள், நிகழ்வுகளுடன் 'ஆன்மீக குரு', 'இறைவன் உதவி', 'நான் கடவுளைக் கண்டால்' என்பன உள்ளிட்ட 29 பகுதிகளாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

'குருவின் முக்கியத்துவம்' என்ற பகுதியில் உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கிருஷ்ணரின் கீதையும், வள்ளுவரின் திருக்குறளும் இணைந்து சிறப்பான தீர்வைக் கொடுக்கும் என்று தெரிவித்திருப்பது முற்றிலும் உண்மை. 'இறைவன் உதவி' என்ற பகுதியில் நேர்மையானவர்களுக்கும், உண்மையானவர்களுக்கும் ஏற்படும் துன்பத்திலிருந்து இறைவன் எந்த வகையில் உதவுகிறார் என்பதை நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

பிரச்னைக்கு தீர்வு நம்மிடமே உள்ளதைத் தெரிவிக்கும் விதமாக உங்களுக்கு 'பயப்படுங்கள்' என்ற பகுதியில் பெற்றோர், பெரியோர், ஆசிரியர், மேலதிகாரிகளிடம் பணிவு காட்டுங்கள், மரியாதை கொடுங்கள். ஆனால், பயப்படாதீர்கள்; பயம் வேறு, மரியாதை வேறு என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டால் பயமறியா நிலையுடன் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இறுதியாக மனதில் ஆழப்பதிந்த எண்ணங்களே புறச்சூழலை நிர்ணயிக்கின்றன என்பது மிக அருமை.

இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தை திறந்தவுடன் நம்மை ஈர்த்த ஒரு விஷயம் என்னவென்றால், இப்பதிப்பு விற்பனைக்கல்ல, இலவசமும் அல்ல எனத் தெளிவுபடுத்தி, நீங்களும் படித்து, மற்றவர்களும் படிக்க உதவலாமே! படித்தபிறகு இந்தப் புத்தகத்துக்கான விலையை நீங்களே நிர்ணயித்து, அதை தொண்டு நிறுவனங்களுக்கோ, கோயில்களுக்கோ, ஏழைகளுக்கோ கொடுங்கள்! அது.. எங்களை வந்து சேரும் என்று தெரிவித்திருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments