FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 13 மே 2024, 11:04 am IST
பகிர்:

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சினேகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது

Advertisement

Advertisement

இக்கோயில் பாண்டி ஸ்தலம் 14ல் இது 8 ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், அப்பர் ஆகியோர் வந்து பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா வருகிற திங்கள்கிழமை காலை சிவாச்சரிகள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

இதனைத் தொடாந்து, அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளுடன தீமராதனை காண்பிக்கப்பட்டன.

தொடர்ந்து, பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் 1ஆம் திருநாளான இந்திர விமானத்தில் சுவாமி அம்மன் வீதி உலா, 14 ஆம் தேதி பல்லக்கு, 15ஆம் தேதி பூத வாகனம், 16 ஆம் தேதி கைலாச வாகனம், 17 ஆம் தேதி யானை வாகனம், 18 ஆம்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 19 ஆம் தேதி இந்திர விமானம், 20 ஆம் தேதி குதிரை வாகனங்களில் சுவாமியும் அம்மனும் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 21ம் தேதி நடைபெறும். 22 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது .

விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் பாண்டியன், 22 1/2 கிராம நாட்டார்கள் மற்றும் நகர்நல கமிட்டியாளர்கள் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments