காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்!
காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பற்றி..
காட்பாடி வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் கோயிலில் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு ஒவ்வொரு வகையில் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் மூன்றாம் ஆடி வெள்ளியான இன்று கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மனுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் பழைய ஐந்து 50 பத்து ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
Goddess Vanjiyamman in Katpadi was specially adorned with currency notes worth ₹30 lakh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.