தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா!
தஞ்சாவூரில் நடைபெற்ற 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா குறித்து...
தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி வீதியுலா இன்று(மார்ச் 31) நடைபெற்றது.
வீதிகளில் உலா வந்த பச்சைக்காளி பவளக்காளியை ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.
தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழா, இந்தாண்டு கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு, இன்று அதிகாலை நடைபெற்றது. வெவ்வேறு ஆலயங்களில் இருந்து பச்சைக்காளி - பவளக்காளி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.
வீதிகளில் உலா வந்த காளியைப் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பச்சைக்காளி - பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நாளை(மார்ச் 31) நள்ளிரவு நடைபெறுகிறது.