FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

37 வயதிலும் நன்றாக விளையாடும் டு ப்ளெஸ்சி!

37 வயதிலும் நன்றாக விளையாடும் டு ப்ளெஸ்சியை டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னி மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். 

Updated On : 9 ஜூலை 2022, 3:00 pm IST
கோப்புப் படம்
பகிர்:

37 வயதிலும் நன்றாக விளையாடும் டு ப்ளெஸ்சியை டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என மோர்னி மோர்கல் கருத்துத் தெரிவித்துள்ளார். 

டு பிளெஸ்சி 2020 முதல் தென்னாப்பிரிக்கா அணியில் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்காக அட்டகாசமாக விளையாடிள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் கூறியுள்ளார். டூ ப்ளெஸ்சிப் பற்றி மோர்னி மோர்கல் கூறியதாவது: 

Advertisement

Advertisement

டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு அனுபவம் வாய்ந்த பெரிய வீரர் யாராவது தேவைப்படுகிறார்கள். டு பிளெஸ்சி 37 வயதிலும் நன்றாக விளையாடுகிறார். பீல்டிங்கிலும் நன்றாகவே இருக்கிறார். அவர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அருமையாக விளையாடுவதை பார்க்கிறோம். இப்போதைய தென்னாப்பிரிக்க அணி சம பலத்துடன் இருக்கிறது. ககிசோ ரபாடா, ஆண்ட்ரிக் நோர்கியா ஆஸ்திரேலியாவில் அருமையாக பந்து வீசுவார்கள். சுழல் பந்தில் ஷம்ஸி இருக்கிறார். இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு நான் ஒரு பெரிய ரசிகன். ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொள்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments