முகப்பு
கிரிக்கெட்

கே.எல்.ராகுல் எல்எஸ்ஜியின் ஒரு அங்கம்! லக்னௌ அணியின் உரிமையாளர் புகழாரம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கே.எல்.ராகுல் ஒரு அங்கத்தினர் போன்றவர் என அந்த அணியின் உரிமையாளர் புகழ்ந்து பேசியுள்ளார்.

Updated On : 28 ஆகஸ்ட் 2024, 9:19 pm IST
லக்னௌ அணியின் உரிமையாளர், கே.எல்.ராகுல். - படம்: எக்ஸ்
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டா பக்கத்தில் கே.எல்.ராகுல், “நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன். காத்திருங்கள்” என சமீபத்தில் கூறியிருந்தார்.

32 வயதாகும் கே.எல்.ராகுல் 50 டெஸ்ட் போட்டிகளில் 2863 ரன்களும் 77 ஒருநாள் போட்டிகளில் 2851 ரன்களும் 72 சர்வதேச டி20களில் 2265 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 4,683 ரன்கள் குவித்துள்ளார். 

கே.எல்.ராகுல் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தியுள்ளார். தற்போது இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார். 

Advertisement

Advertisement

ஐபிஎல் தொடரில் லக்னௌ அணிக்கு 2022 முதல் கேப்டனாக செயல்படுகிறார்.

கடந்த முறை ஒரு போட்டியின்போது கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா கோபமாக பேசிய விடியோ வைரலானது. இதனால் கே.எல்.ராகுல் அந்த அணியில் இருந்து விலகுவாரா என சர்ச்சை கிளம்பியது.

லக்னௌ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமனம்.

தற்போது லக்னௌ அணிக்கு ஜாகீர் கான் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சீவ் கோயங்கா பேசியதாவது:

கடந்த 3 வருடங்களாக அவ்வப்போது கே.எல்.ராகுலை சந்தித்து வருகிறேன். ஆனால் இது ஊடகங்களில் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தப்படுகிறது எனப் புரியவில்லை.

லக்னௌ அணியின் ஒரு பகுதி கே.எல்.ராகுல். எல்.எஸ்.ஜி. அணியின் துவக்கத்தில் இருந்து ராகுல் இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கும் எனது மகனுக்கும் கே.எல்.ராகுல் குடும்ப உறுப்பினர் போன்றவர்.

யாரையெல்லாம் தக்கவைப்பது என்பதைக் குறித்து சிந்திக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என பல மாதங்கள் இருக்கின்றன. முதலில் ஐபிஎல் நிர்வாகம் என்ன விதியை சொல்கிறது எனப் பார்ப்போம். முடிந்த அளவுக்கு அதே அணியை தக்க வைக்க முயற்சிப்போம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments