டெம்பா பவுமாவிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த், பும்ரா!
தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியதாவது...
தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா தன்னிடம் பும்ரா, ரிஷப் பந்த் மன்னிப்பு கேட்டதாகக் கூறியுள்ளார்.
அதேசமயம் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் இந்தியர்களை அவமதிப்பாகப் பேசியதையும் கண்டித்து பேசியுள்ளார்.
என்ன பிரச்னை?
Advertisement
Advertisement
இந்திய அணியை சொந்த மண்ணில் 2-0 என தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்தத் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமாவை குள்ளமாக இருப்பதால் ’பவுனா’ எனக் கிண்டல் செய்து பேசினார்.
இது சர்ச்சையான நிலையில், தெ.ஆ. அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிடச் செய்வது போன்ற பொருள்படியும்பான ’க்ரோவல்’ எனும் வார்த்தையைக் கூறினார்.
இது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா இஎஸ்பிஎன் கிரிகின்போவின் எழுதியதாவது:
மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த், பும்ரா...
என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். கடைசியில் மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப் பந்த் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்.
அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் எனக்கு இருட்டாகிவிட்டது. அது என்னவாக இருக்குமென எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன்.
திடலில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால், நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை என்றார்.
டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடரை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
South Africa captain Temba Bavuma has opened up about the "unsavoury" remarks made during his team's recent tour of India, revealing that he received an apology from Jasprit Bumrah and Rishabh Pant for an offensive comment while acknowledging that Proteas coach Shukri Conrad should have avoided the infamous "grovel" reference.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.