FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

9 ஜனவரி 2025, 6:10 pm IST
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் - படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.

புறக்கணிக்க வலியுறுத்தல்

Advertisement

Advertisement

அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த 160-க்கும் அதிகமான அரசியல்வாதிகள் கடிதம் ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்களுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபட்டுள்ள தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான எந்த ஒரு அடக்குமுறையையும் பொறுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments