FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கொல்கத்தா பனிப்புகையை குற்றம்சாட்டிய இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்!

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக ஆட முடியவில்லையென இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் குற்றச்சாட்டு.

Updated On : 25 ஜனவரி 2025, 12:21 pm IST
ஹாரி புரூக் - படம்: ஏபி
பகிர்:

கொல்கத்தாவின் பனிப்புகையினால் சரியாக விளையாட முடியவில்லையென இங்கிலாந்து துணை கேப்டன் ஹாரி புரூக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜன.22இல் தொடங்கியது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

2ஆவது டி20 சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு (ஜன.25) நடைபெறவிருக்கிறது

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஹாரி புரூக் கொல்கத்தாவின் பனிப்புகையினால் சுழல்பந்துகளை ஆட முடியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹாரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். வருண் சக்கரவர்த்தி (3/23) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஹாரி புரூக் கூறியதாவது:

பனிப்புகைதான் காரணம்

நான் பிஷ்னோயை விளையாடவில்லை. ஆனால், வருண் சக்கரவர்த்தி தலைசிறந்த பந்துவீச்சாளர். அவரது பந்தினை கணிக்க முடியவில்லை. அநேகமாக அன்றைய இரவு பனிப்புகையினால் பந்தினை சரியாக பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். சென்னையில் பந்து நன்றாக தெரியும். அதனால் இங்கு பந்தினை பார்ப்பது சற்று எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.

வருண் சக்கரவர்த்தி அற்புதமான வீரர். பல திறமைகளுடன் துல்லியமாக பந்து வீசுகிறார். இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்கள் மீது சென்னையில் அழுத்தத்தை அளிப்போம் என நம்புகிறேன் என்றார்.

இதேபோல் இதற்கு முன்பும்...

இதேபோல் இதற்கு முன்பு 1992-93இல் டெட் டெக்ஸ்டர் முதல் டெஸ்ட் தோல்விக்கு பனிப்புகையை காரணம் கூறியிருந்தார். 2017ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை போட்டியில் சில வீரர்கள் வாந்தி எடுத்ததால் போட்டி கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments