FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Updated On : 13 மார்ச் 2025, 12:10 pm IST
ரோஹித் சர்மா, ஏபிடி வில்லியர்ஸ் - படங்கள்: ஏபி, யூடியூப் / ஏபிடி வில்லியர்ஸ்.
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்தார்கள். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றவுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மா இதனை மறுத்துவிட்டார். விராட் கோலியும் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்நிலையில் தெ.ஆ.வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்?

மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது ரோஹித்தின் வெற்றி சதவிகிதம் 74%ஆக இருக்கிறது. இது மற்றவர்களை மிக அதிகம். ரோஹித் இதேபோல் சென்றால் எக்காலத்துக்குமான ஒருநாள் போட்டிகளின் மிகச் சிறந்த கேப்டனாக மாறிவிடுவார்.

வதந்திகளை ரோஹித்தும் ஓய்வுபெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்? கேப்டனாக மட்டுமில்லை, பேட்டராகவும் ரோஹித் சிறப்பாக செயல்படுகிறார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கதை அளித்தார்.

ரோஹித் சாதனைகளே அவருக்காக பேசும்

அழுத்தம் அதிகமாக இருக்கும்போது முதல் ஆளாக முன்னின்று அணியை வழிநடத்தினார். அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவருக்காக பேசும். அது மட்டுமில்லை, அவர் தனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளார்.

பவர்பிளேவில் அவரது ஸ்டிரைக்-ரேட்டை பாருங்கள். 2022க்குப் பிறகு 115ஆக முன்னேறியுள்ளது. அதுதான் நல்லது, சிறந்ததுக்குமான வித்தியாசம். அது உங்களது சொந்த ஆட்டத்தை மாற்றும், அது நிற்கவே போவதில்லை.

எப்போதுமே எதாவது சிறப்பாக செயல்படவும் கற்றுக்கொள்ளவும் இருக்கத்தான் செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments