பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா
ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதன் மூலம் அவரது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
பொருளாதார ரீதியில் உதவிய ஐபிஎல்
Advertisement
Advertisement
ஐபிஎல் தொடர் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியதாகவும், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஐபிஎல் உதவியதாகவும் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பொருளாதார ரீதியில் ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் அதிகமாக உதவியது. மேலும், நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடர் எனக்கு பெரிதும் உதவியது. சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்குத் தேர்வானேன். அப்போது டி20 போட்டிகளுக்கு லெக் ஸ்பின்னர்களை பெரிதாக யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், நான் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடுவதாகக் கூறி வீரேந்திர சேவாக் என்னை அவரது அணியில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.
நான் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்தேன். இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தொடங்கினேன். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் லெக் ஸ்பின்னர்கள் என்பதை மக்கள் தாமதமாக அங்கீகரிப்பது வருத்தமளிக்கிறது. உதாரணத்துக்கு ஷேன் வார்னே மற்றும் அனில் கும்ப்ளேவை கூறலாம் என்றார்.
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 68 போட்டிகளில் விளையாடியுள்ள அமித் மிஸ்ரா 156 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Amit Mishra has said that the IPL series has helped him a lot financially.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.