தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான்; மே.இ.தீவுகளை வீழ்த்தி அசத்தல்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் முன்னிலை பெற்றது.
பாகிஸ்தானைக் காட்டிலும் 43 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணிக்கு 75 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, 23.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 160* ரன்கள் எடுத்த அப்துல்லா சஃபீக், இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதேபோல, முதல் இன்னிங்ஸில் 88 ரன்கள் எடுத்து அசத்திய கேப்டன் பாபர் அசாம் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா சஃபீக் ஆட்ட நாயகனாகவும், ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் பாபர் அசாம் இருவரும் தொடர் நாயகன்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. மேலும், வெளிநாடுகளில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளுக்கும் பாகிஸ்தான் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வெளிநாடுகளில் நடைபெற்ற கடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், தற்போது அந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
The Pakistan team achieved a magnificent victory by eight wickets in the second Test match against the West Indies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.