ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அஜிங்க்யா ரஹானே விளையாடவுள்ளார்.
ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அஜிங்க்யா ரஹானே விளையாடவுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வை அறிவித்த சிறிது நாள்களிலேயே அவர் ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார். அவர் ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
ஐரோப்பா டி20 லீக் தொடரில் விளையாடவுள்ளது குறித்து அஜிங்க்யா ரஹானே பேசியதாவது: இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நாளே எனக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஸ்டீவ் வாக் என்னை தொலைபேசியில் அழைத்து உங்களால் ஆம்ஸ்டர்டாம் அணிக்காக விளையாட முடியுமா என்று கேட்டார். நான் ஒரு நாள் யோசித்த பிறகு, ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் அணிக்காக விளையாட முடிவெடுத்தேன்.
எனக்கு நிறைய கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அதனால், என்னுடைய அனுபவங்களை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பாக இதனைக் கருதினேன். அதனால், ஐரோப்பா டி20 பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
38 வயதாகும் அஜிங்க்யா ரஹானே இந்திய அணிக்காக 195 போட்டிகளில் விளையாடி 8414 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 சதங்கள் மற்றும் 51 அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 188.
ஐபிஎல் தொடரில் ரஹானே 197 போட்டிகளில் விளையாடி 5367 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 105*. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ரஹானே 8-வது இடத்தில் உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.
Ajinkya Rahane is set to play in the Europe T20 Premier League cricket tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.