31 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.
ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 198 ரன்களும், வங்கதேச அணி அதன் முதல் இன்னிங்ஸில் 426 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. வங்கதேசத்தைக் காட்டிலும் 228 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 14.2 ஓவர்களில் எட்டி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
31 ஆண்டுகளில் முதல் முறை...
கடந்த 31 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவைத் தவிர வேறு எந்தவொரு ஆசிய நாட்டிடமும் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததில்லை. சொந்த மண்ணில் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் அந்த ஆதிக்கத்தை வங்கதேசம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
அதேபோல, ஆஸ்திரேலிய மண்ணில் மிகவும் குறைந்த போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்த ஆசிய அணி என்ற சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது. வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவதற்கு 12 போட்டிகளும், பாகிஸ்தான் அணி 7 போட்டிகளும் எடுத்துக் கொண்டன. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி பெறும் இரண்டாவது மிகப் பெரிய வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.
The Bangladesh team has made history by defeating the Australian team on its home soil.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.