தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!
சாதனை நிகழ்த்த காத்திருந்த ஹார்திக் பாண்டியாவின் புறக்கணிப்பு குறித்து...
இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஹாசாரே கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பளிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா ஒருவேளை இந்தத் தொடரில் பங்கேற்று பேட்டிங்கில் 96 ரன்கள் பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் எடுத்தால் தலைசிறந்த ஆலர்வுண்டர்கள் வரிசையில் அவரது பெயரும் இடம்பெற்றிருக்கும்.
Advertisement
Advertisement
இதுவரை ஹார்திக் பாண்டியா தனது 94 போட்டிகளில் 68 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1,904 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 91 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக 2000 ரன்கள், 100 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷேன் வாட்சன், ஜேக் காலிஸ், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கபில் தேவ், சனத் ஜெயசூர்யா, விப் ரிச்சர்ட்ஸ், போன்ற ஜாம்பவான்கள் இருந்துள்ளார்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹார்திக் பாண்டியா விளையாடி இருந்தால் எளிமையாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஹார்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா
நியூசிலாந்து அணி: டெவன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜகரி ஃபோல்க்ஸ், நிக் கெல்லி, ஜோஷ் கிளார்க்சன், மைக்கேல் ரே, கைல் ஜேமிசன், மிட்செல் ஹே, ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் லெனாக்ஸ்.
The fact that Indian player Hardik Pandya was not selected for the series against New Zealand has surprised fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.