FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பிபிஎல்: மீண்டும் மழை! 4 ரன்கள் வித்தியாசத்தில் மெல்பர்ன் அணி தோல்வி!

பிபிஎல் நாக் அவுட் ஆட்டத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி குறித்து...

Updated On : 21 ஜனவரி 2026, 5:57 pm IST
பியூ வெப்ஸ்டர், மெல்பர்ஸ் ஸ்டார் அணியினர். - படங்கள்: பிபிஎல், மெல்பர்ன் ஸ்டார்ஸ்
பகிர்:

பிபிஎல் நாக் அவுட் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி இந்த வெற்றியுடன் சேலஞ்சர்ஸ் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது.

நாக் அவுட் சுற்றில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.

Advertisement

Advertisement

இந்தப் போட்டி மழையின் காரணமாக முதலில் 10 ஓவர்களாக மாற்றப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 10 ஓவர்களில் 114/ 5 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 47 ரன்கள் எடுத்தார்.

அடுத்து மெல்பர்ன் அணி பேட்டிங் செய்தபோது 2 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

அதனால், இந்தப் போட்டி 7 ஓவர்களாக மீண்டும் மாற்றப்பட்டு, 85 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தக் காரணத்தினால் மெல்பர்ன் அணியினர் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவையாக இருக்க களத்தில் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இருந்தார்கள். கடைசி ஓவரை மிட்செல் ஓவன் வீச, மெல்பர்ன் அணி இறுதியில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி ஓவரின் விவரங்கள்

1. ஸ்டாய்னிஸ் 6 ரன்கள்

2. வைட்

2. ஸ்டாய்னிஸ் ஆட்டமிழப்பு

3. ஹில்டன் கார்ட்ரைட் 4 ரன்கள்

4. ஹில்டன் கார்ட்ரைட் 4 ரன்கள்

5. ஹில்டன் கார்ட்ரைட் 6 ரன்கள்

6. ஹில்டன் கார்ட்ரைட் 1 ரன்.

summary

In the BBL knockout match, Marcus Stoinis's team lost by 4 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments