வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி..! அடுத்து என்னாகும்?
இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி குறித்து...
வங்கதேசம் தங்களது டி20 போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால், வங்கதேசம் அணி இந்தியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட மறுத்தது சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
என்ன பிரச்னை?
Advertisement
Advertisement
வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்படுவதால் அதன் தாக்கம் இந்தியாவில் எதிரொலித்தது.
அதனால், வங்கதேச வீரர் முஷ்தஃபிகுர் ரஹ்மானை ஐபிஎல் நிர்வாகம் வேண்டிக்கொண்டதன் பேரில் கேகேஆர் அணி நீக்கியது.
இந்தக் காரணத்தினால், வங்கதேச அணியினர் இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி இலங்கையில் விளையாட ஐசிசியிடம் அனுமதி கோரினர்.
ஐசிசி அதிகாரிகள் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.
அனுமதி மறுப்பு ஏன்?
தகவலின்படி பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமே இதற்கு ஆதரவாக ஓட்டளித்ததாகவும் மற்ற அணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வங்கதேசத்துக்கு பாதுகாப்பில் குறைவில்லை என்றும் கடைசி நேரத்தில் போட்டிகளை மாற்ற முடியாது என்றும் ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அறிக்கையில் ஐசிசி, “இந்தச் சூழ்நிலையில் போட்டிகளை இடம் மாற்றுவது ஐசிசியின் புனிதத் தன்மைக்கு ஊரு விளைவிப்பதாகும். மேலும், இது உலக அரங்கில் இது ஐசிசியின் நடுநிலைத்தன்மைக்கு பாதகமாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் இருந்து வங்கதேசம் விலகினால் ஐசிசி தரவரிசையின்படி அடுத்த இடத்தில் இருக்கும் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
The International Cricket Council (ICC) on Wednesday rejected the request from the Bangladesh Cricket Board (BCB) to shift its team's T20 World Cup fixtures to Sri Lanka, saying the matches will proceed as scheduled since there was no credible threat to the safety of Bangladesh players, officials or fans at any of the tournament venues in India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.